குருணை அரிசி ஏற்றுமதிக்கு தடை நீக்கப்பட்டது ஆனால்...
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி குருணை அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
தற்போது அந்தத் தடை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட்டுள்ளது.
உணவு பஞ்சம் ஏற்படக்கூடிய நாடுகளில் இருந்து அந்த நாட்டு அரசின் கோரிக்கையின் பெயரில், இந்திய அரசின் அனுமதியோடு 100% உடைந்த குருணை அரிசியை ஏற்றுமதி பண்ணலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனா இந்தியாவிலிருந்து 100% உடைந்த குருணை அரிசியை வாங்க காத்திருக்கிறது. பிராணிகளின் உணவுக்காகவும் எத்தனால் தயாரிக்கவும் இந்திய குருணை அரிசியை வாங்க சீனா விரும்புகிறது.
இதுபோன்று தடையில்லாமல் ஏற்றுமதி செய்யப்பட்டால் உள்நாட்டில் அரிசி விலை உயர வாய்ப்புள்ளதால் மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment