சீனாவிற்கு குரங்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை.
பல்வேறு உயிருள்ள மிருகங்களை பல நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன.
அந்த வகையில் குரங்கு ஏற்றுமதி என்பது நமக்கு புதிதுதான்.
இலங்கையில் ஒரு குறிப்பிட்ட வகை குரங்கு மிக அதிகமாக இனப்பெருக்கம் செய்து அங்கு இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு பெரிய தொல்லையாக இருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு முடிவு எடுத்தது.
சீனாவில் இருக்கக்கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிருக காட்சி சாலைகளில் இந்த குரங்குகள் பராமரிக்கப்படும் என்று அறிவித்தது.
சர்வதேச அளவிலான பல்வேறு விலங்கு நல வாரியங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சீனா குரங்குகளை உணவுக்காக பயன்படுத்து வாய்ப்புண்டு என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் பல மருத்துவ பரிசோதனைகளுக்கு குரங்குகள் உட்படுத்தப்படலாம் என்றும் கவலை தெரிவித்தனர்.
இதனால் இலங்கை அரசு தற்காலிகமாக அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளது.
அதே நேரம் இலங்கைக்கான சீன தூதர் மிருக காட்சி சாலையில் வைத்து ஒரு லட்சம் குரங்குகளும் பராமரிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment