இந்தியாவில் கோதுமை ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கோதுமையை இறக்குமதி செய்து அதை கோதுமை மாவாக மதிப்பு கூட்டல் செய்து ஏற்றுமதி செய்வதற்கு எந்த தடையும் இல்லை.
அப்படி இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு முழுமையாக இறக்குமதி வரி விலக்கு பெறுவதற்கு அட்வான்ஸ் ஆத்திரைசியேசன் ஸ்கீம் என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை 1.070 கிலோவுக்கு நிகராக ஒரு கிலோ கோதுமை மாவு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.
இப்படி கோதுமை மாவு ஏற்றுமதி செய்யப்படும் போது அதில் சேர்க்கப்படும் வெந்தயப்பொடி, சோயா மாவு, ஓட் மீல், விட்டமின்கள் போன்றவை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும், கண்டிப்பாக இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கக் கூடாது.
ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை மாவில் 80 சதவீதம் அளவிற்கு முழு கோதுமை மாவு இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனை.
மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் போது கோதுமை இறக்குமதிக்கு முழுமையான இறக்குமதி வரி விலக்கு பெறலாம்.
தரமான ஏற்றுமதி பொருட்கள் வாங்க விருப்பமா?
https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment