ஏலக்காய் ஏற்றுமதியில் சவால்களை சந்திக்கும் இந்தியா.
ஏலக்காய், மிளகு போன்ற பொருட்களை வியாபாரம் செய்யும் நோக்கத்துடனே ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தனர்.
ஏனெனில் இந்திய தரத்திற்கு நிகராக அப்போது உலகில் எங்கும் இது போன்ற பொருட்கள் கிடைப்பதில்லை.
அன்று மட்டுமல்ல இன்று கூட இந்திய தரத்தில் ஏலக்காய் உலகில் எங்குமே கிடைப்பதில்லை.
ஆனாலும் ஏலக்காய் ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்திய ஏலக்காய் ஏலம் மையம் கேரளாவிலும் தமிழகத்தில் தேனி மாவட்டம் போடியிலும் உள்ளது.
இங்கு நிர்ணயிக்கப்படும் ஏலத் தொகை உலக அளவில் உள்ள ஏலக்காய் மார்க்கெட்டில் எதிரொலிக்கும்.
மிகக் குளிர்ந்த நாடுகளில் உடல் வெப்பத்தை அதிகரிப்பதற்கு இந்திய ஏலக்காயை இன்றும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
ஏலக்காய் ஏற்றுமதியில் நமக்கு போட்டி நாடு கௌதமாலா.
கௌதமாலாவின் மானாவாரியாக ஏலக்காய் விளைகிறது.
மானாவரி விளைச்சல் என்பதால் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதில்லை.
விளைச்சல் அதிகம் என்பதால் விலையும் குறைவு.
இந்திய ஏலக்காயை ஒப்பிடும்போது கௌதமாலாவின் ஏலக்காய் தரம் மிக மிகக் குறைவு.
இன்று பல்வேறு நாடுகள் பொருளாதார மந்த நிலை காரணமாக விலை குறைந்த பொருட்களை நாடுகின்றன.
அந்த வகையில் பார்க்கும்போது கௌதமாலா ஏலக்காய்களை வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் விரும்பி வாங்குகின்றன.
இது இந்திய ஏலக்காய் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய சவால்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment