ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற ஏற்றுமதி கொள்கையின் லட்சியம் என்ன? மத்திய அரசு விளக்கம்.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் இது பற்றி கேள்வி எழுப்பின.
இந்தியாவில் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் என்ன என்றும் சபையில் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு அளித்த பதில் ஒரு பொருள் ஒரு மாவட்டம் என்ற கொள்கை தற்போது பரவலாக பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இது ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்து வருவதாகவும், மதியரசு எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த கொள்கையை அமல்படுத்தப் போவதாகவும் கூறியது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து 36 மாவட்டங்களும் இந்த ஒரு பொருள் ஒரு மாவட்டம் என்ற கொள்கையின் கீழ் வந்துள்ளது.
இதன்படி ஒரு மாவட்டத்தில் ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அந்த பொருளை உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உருவாக்கப்பட்ட கொள்கையாகும்.
இதில் மத்திய மாநில அரசுகள், DGFT, ஏற்றுமதி மேம்பாட்டு வாரியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் ஆகியவை இணைந்து செயல்படும்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment