ஏற்றுமதியாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்த காதலர் தினம்.
காதலர் தினத்தை ஒட்டி ரோஜா பூ ஏற்றுமதி அதிகமாக இருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக ரோஜா பூ ஏற்றுமதி கொரோனா நோய் தொற்று காரணமாக பெரிய பாதிப்பை சந்தித்தது.
ஆனால் இந்த வருடம் பல ஐரோப்பிய நாடுகளில் ரோஜா உற்பத்தியை விவசாயிகள் கைவிட்டனர்.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உரத்தட்டுப்பாடு ரோஜா விளைச்சலை பாதித்தது.
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவியதால் பல விவசாயிகள் ரோஜா உற்பத்தியை மேற்கொள்ளவில்லை.
இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினத்திற்கான ரோஜா ஏற்றுமதி வாய்ப்புகள் இந்தியாவை நோக்கி வந்தன.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 18 கோடி ரூபாய்க்கு நான் ரோஜா ஏற்றுமதி செய்துள்ளோம். அதற்கு முந்திய வருடம் இதே நவம்பர் மாதத்தில் நாம் வெறும் ஒன்பது கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளோம்.
அதன் பிறகு ரோஜா ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாக இந்தியாவுக்கு வந்து கொண்டே இருந்தன.
நமது ஒட்டு மொத்த ரோஜா ஏற்றுமதியில் இங்கிலாந்துக்கு 35 சதவீதமும் ஆஸ்திரேலியாவிற்கு 19 சதவீதம் ஜப்பானுக்கு 18 சதவீதமும் அனுப்பப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல் காதலர் தினத்திற்காக பிரத்தியேக ஏற்றுமதி ஆடர்கள் மலேசியா சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்தன.
மும்பையில் இருந்து விமான மூலமாக 60% ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெங்களூர் விமான நிலையத்திலிருந்து கணிசமான அளவு பல்வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment