இந்தியாவின் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் அமெரிக்கா.

இந்தியாவின் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் அமெரிக்கா.

அமெரிக்காவில் உள்ள விவசாய கூட்டுறவு சங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் திராட்சை, ஆப்பிள் மற்றும் பாதாம் போன்றவை பெரும் சவாலை சந்தித்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
நாம் அதிக அளவில் கலிபோர்னியாவில் இருந்து பாதாம் இறக்குமதி செய்கிறோம்.
சமீபத்தில் ஏற்பட்ட இந்தியா ஆஸ்திரேலியா இலவச வர்த்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து பாதாம் இறக்குமதி செய்ய வழிவகை உள்ளது.
ஒரு வருடத்திற்கு 34,000 தங்கள் வரை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் போது அதற்கான இறக்குமதி வரியில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் போது அந்த வரி தள்ளுபடி கிடையாது.
இதன் மூலம் பெரும்பாலான மக்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்ய முற்படுவார்கள் இது அமெரிக்காவிற்கு ஒரு இழப்பாகும்.
திராட்சையை பொருத்தவரை சிலி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு  இறக்குமதி செய்யும் போது அதற்கான இறக்குமதி வரி 24 சதவீதம்.
ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் போது அதற்கான இறக்குமதி வரி 30 சதவீதம்.
ஒரு காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள் என்றாலே அது வாஷிங்டன் ஆப்பிள் தான்.
சங்க காலமாக அது போன்ற ஆப்பிளை நாம் பார்க்க முடிவதில்லை.
உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியா ஆப்பிள் இறக்குமதி செய்கிறது.
ஒரு சமயத்தில் இந்திய ஆப்பிள் மார்க்கெட்டில் 55 சதவீதத்தை கையில் வைத்திருந்த அமெரிக்கா இப்போது இந்திய ஆப்பிள் மார்க்கெட்டில் வெறும் ஒரு சதவீதத்தை மட்டுமே கையில் வைத்துள்ளது.
இது பற்றி அமெரிக்க அரசு தீவிரமாக பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க விவசாய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home

Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி

Comments