ஜெர்மனியர்கள் இறக்குமதி செய்ய விரும்புவது என்ன? ஏற்றுமதியாளர் தகவல்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருப்பூரில் இருந்து ரெடிமேடு ஆடைகள் தயாரிக்கும் சுமார் 15 ஏற்றுமதியாளர்கள் ஜெர்மனியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் வர்த்தக கூட்டத்தில் பங்கேற்றனர்.
பல்வேறு இறக்குமதியாளர்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்
அதில் கலந்து கொண்ட ஒரு ஏற்றுமதியாளர் செய்தியாளர்களிடம் இன்றைய காலகட்டத்தில் ஜெர்மனி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
ஜெர்மனி மட்டுமல்லாமல் பல்வேறு வளர்ந்த நாடுகளில் பொருளாதார சிக்கல் நிலவுகிறது.
மக்கள் அத்தியாவசிய பொருளான உணவு குடிநீர் போன்றவற்றிற்கு செலவு செய்ய விரும்புகின்றனர்.
பகட்டான ஆடைகள், விலை உயர்ந்த பிராண்டட் உடைகள், விலை உயர்ந்த அணிகலன்கள் போன்றவற்றிற்கு மக்கள் செலவு செய்ய முன் வரவில்லை.
ஆகவே இன்றைய சூழலில் மலிவான ஆடைகள் ஜெர்மனியில் விற்பனை ஆவதற்கான வாய்ப்பு உண்டு.
குறிப்பாக நூல் மற்றும் துணி தயாரிப்பில் ஈடுபடும் தொழிற்சாலைகளில் தேங்கும் கழிவுத் துணியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்கு இதுவே சரியான தருணம் என்று தெரிவித்தார்.
ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களை வாங்குவதற்கு சிறந்த தளம் - https://sites.google.com/view/micro-stories/home
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#ஏற்றுமதி
Comments
Post a Comment