கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கும் மாநிலம் ஆந்திரா.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அதிக அளவு இறால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்திய கடல் உணவுப்பொருள்களை பெருமளவு இறக்குமதி செய்கின்றன.
இறால் மட்டுமல்லாமல் உறைய வைக்கப்பட்ட மீன் வகைகள் மற்றும் உலர்ந்த மீன் வகைகள் ஏற்றுமதியாகின்றன.
உலகில் வேறு எங்கும் கிடைக்காத ஒரு சில இறால் வகைகள் இந்திய கடல் பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன.
அந்த இறால் வகைகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய தேவையுள்ளது.
ஆந்திராவிற்கு அடுத்தபடியாக கடல் பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மாநிலம் கேரளா.
கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் கடல் பொருட்கள் ஏற்றுமதி 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
மதிப்பீட்டு அளவில் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவிலிருந்து கடல் உணவுப் பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்தது தான்.
Export Import Business Consultant WhatsApp 91-9043441374
#export #exportbusiness
Comments
Post a Comment