ஏற்றுமதியை அதிகரிக்கவும் இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றை நாம் அதிக அளவு இறக்குமதி செய்கிறோம்.
இது போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு விதிப்பது என்பது மிகவும் சவாலானது.
ஆனால் நாம் உள்நாட்டிலேயே தயாரிக்க கூடிய வாய்ப்புள்ள பல பொருட்களை பெருமளவு இறக்குமதி செய்கிறோம் என்பதை மத்திய அரசு சமீபத்தில் கண்டறிந்தது.
அதன் விளைவாக எடுக்கப்பட்ட ஒரு முயற்சிதான் பொம்மை இறக்குமதிக்கான கட்டுப்பாடு.
பொம்மை வர்த்தகம் என்பது உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.
நாம் சீனாவில் இருந்து அதிக அளவு பொம்மைகளை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த இறக்குமதிக்கு பெருமளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதே நேரத்தில் உள்நாட்டில் பொம்மைகள் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது.
குறிப்பாக கர்நாடகாவில் 5000 கோடி முதலீட்டில் பொம்மை பார்க் ஒன்று உருவாக்கப்பட்டு முழு வீச்சில் வேலை நடைபெற்று வருகிறது.
இதன் விளைவு தற்போது கண்கூடாக தெரிகிறது.
இந்த மூன்று வருடங்களில் பொம்மை இறக்குமதி 70 சதவீதம் குறைந்திருக்கிறது.
அதேநேரத்தில் பொம்மை ஏற்றுமதி 60 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக மர பொம்மைகள் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் போன்றவற்றிற்கு குறைந்தபட்சம் 100 முதல் 150 சதவீத லாபத்தில் நாம் ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இப்போது வழிவகுத்துள்ளது என்பதே நிதர்சனம்.
தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களும், இந்தியாவிலிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மின்புத்தகம் தற்போது சலுகை விலையில் ரூபாய் 79 க்கு கிடைக்கிறது.
இந்த சலுகை ஜூலை 2022, மாதம் முழுவதும் இருக்கும்.
ஏற்றுமதியில் பொருள் தேர்வுக்கு உதவும் ஒரு முக்கியமான புத்தகம் இது.
இந்த புத்தகத்தை வாங்க விரும்பினால் கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
https://www.amazon.in/dp/B08DMMSQZP/ref=cm_sw_r_wa_apan_8REHV7T2167RCBW7W8B6
Comments
Post a Comment