சித்தூர் மாவட்ட மாம்பழத்தை வாங்க காத்திருக்கும் ஐரோப்பிய நாடுகள்..
சித்தூர் மாவட்டத்தில் தோட்டாபுரி ரக மாம்பழம் மிகவும் புகழ்பெற்றது.
மிகுந்த சுவை உடையது.
இந்த ரக மாம்பழம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளிலும் விரும்பி வாங்கப்படுகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் கடந்த வருடம் சுமார் முப்பத்தி இரண்டு டன்கள் இறக்குமதி செய்து உள்ளன.
குறிப்பாக ஜெர்மனி அயர்லாந்து நெதர்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்த மாம்பழத்தை விரும்பி வாங்குகின்றன.
ஒட்டுமொத்தமாக கடந்த வருடம் 120 டன்கள் மாம்பழம் ஏற்றுமதி ஆகியிருந்தது.
இந்த வருடம் 300 முதல் 400 டன்கள் அளவிற்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரக மாம்பழத்தை சித்தூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்வதில்லை.
மாறாக மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்திலுள்ள ஏற்றுமதியாளர்கள் மாம்பழங்களை வாங்கி ஏற்றுமதி செய்கிறார்கள்.
Export Import Business Consultant - WhatsApp - 91-9043441374
Comments
Post a Comment